ராஜீவை அவமதிப்போர் தமிழர்கள் அல்ல-தங்கபாலு
சென்னை: ராஜீவ் காந்தியை அவமரியாதை செய்யும் யாரும் உண்மையான தமிழர்கள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலையை கொச்சைப்படுத்திய சம்பவத்தை காங்கிரஸ் கட்சி பொறுத்து கொள்ளாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறது.
இந்த செயலை செய்தவர்கள் மீது புதுவை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
ராஜீவ் இந்தியாவின் பிரதமராகவும், இந்திய வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடுபட்டவர். தைரியம் இல்லாத கோழைகள் இரவு நேரத்தில் அவரது சிலையை கொச்சைப்படுத்தியதன் மூலம் எதையும் சாதிக்கப் போவதில்லை. சாதிக்கவும் முடியாது.
இதுபோன்ற செயல்களால் ராஜீவ் புகழை குறைத்துவிட முடியாது. அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் எவரும் உண்மையான தமிழர்கள் அல்ல.
காங்கிரஸ் கட்சி எப்போதும் அறவழியில் இயங்கும் கட்சியாகும். தேவைபட்டால் இதுபோன்ற சம்பவத்தை தடுத்து நிறுத்தவும் தயங்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications