பங்குச் சந்தை: ஆரம்பமே அடி!!
மும்பை: அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றும் இன்று, ஆசிய- இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
எடுத்த எடுப்பிலேயே சென்செக்ஸில் 217 புள்ளிகள் அதிரடியாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 67 புள்ளிகளை இழந்து தடுமாறிக் கொண்டுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தை வால் ஸ்ட்ரீட்டுக்கு திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் போக்கை அடிப்படையாக வைத்து வர்த்தகத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் பிரிட்டிஷ் பங்குச் சந்தை கிடுகிடுவென சரிந்துவிட்டதால், ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அவர்கள் தயங்குவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க!!).
பிரிட்டனின் ராயல் ஸ்காட்லாந்து வங்கி வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால் (28 பில்லியன் பவு்டுகள்) ஐரோப்பிய மார்க்கெட்டே ஆட்டம் கண்டுள்ளதாம்.
ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் இன்று சரிவில் உள்ளன. ஜப்பானின் நிக்கி 2.5 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. தைவான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் சந்தைகளும் இன்று 3 சதவிகிதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
முற்பகல் 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ்: 9085.43 (-244.14), நிப்டி: 2771.20 (-75.00)