சென்னையில் தவிக்கும் தென் கொரிய கப்பல்

அமெரிக்க பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, தற்போது பல கப்பல் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் தென் கொரியாவை சேர்ந்த பர்ஸ்ட் ஸிப்பங் என்ற கம்பெனியை சேர்ந்த கோல்டன் பிரிசியா என்ற கப்பல் பாமாயில் எண்ணெயை ஏற்றிக் கொண்டு கடந்த டிசம்பர் 15ம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தது.
இந்தக் கப்பல் தனது பயணத்தில் இருந்தபோதே தென் கொரியாவின் இதன் நிறுவனம் திவாலாகிவிட்டது.
இந் நிலையில் சென்னை வந்து சேர்ந்த இந்தக் கப்பல் சரக்குகளை இறக்கிய பின்னர் துறைமுகத்துக்கான வாடகை மற்றும் ஏஜென்ட் செலவுகளை கட்ட பணமில்லை.
நிறுவனம் திவாலாகிவிட்டதால் பணமில்லை என்று கப்பல் உரிமையாளர்கள் கைவிரித்துவிட்டனர். பணம் கட்டாததையடுத்து 25 ஊழியர்களுடன் இக்கப்பல் துறைமுகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்நிறுவனத்தின் 8 கப்பல்கள் உலகம் முழுவதும் பல்வேறு துறைமுகங்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு சம்பளம் கொடுத்தே 4 மாதங்களுக்கு மேல் ஆகிவி்ட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு, கப்பலின் உரிமையாளர்களுடன் பணத்தை கட்டிவிட்டு கப்பலை மீட்டு செல்வது மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அந்த வமைப்பை சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீகுமார் கூறுகையில், பொருளாதார பின்னடைவு கப்பல் துறையையும் அதிகம் பாதித்துள்ளது. பல நிறுவனங்கள் திவாலாகிவிட்டன. இது போன்று கப்பல் பிடித்து வைக்கப்படுவது, தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சென்னையில் இது தான் முதல் முறை. ஊழியர்களின் நலன் பற்றி தான் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம் என்றார் ஸ்ரீகுமார்.
இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க கப்பல்கள் துறைமுகத்துக்குள் நுழையும் முன்னதாகவே பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி யூரியா ஏற்றி வந்த வியட்நாமின் வினாசின் என்ற கப்பலும் 23 ஊழியர்களுடன் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications