சென்னையில் தவிக்கும் தென் கொரிய கப்பல்

அமெரிக்க பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, தற்போது பல கப்பல் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் தென் கொரியாவை சேர்ந்த பர்ஸ்ட் ஸிப்பங் என்ற கம்பெனியை சேர்ந்த கோல்டன் பிரிசியா என்ற கப்பல் பாமாயில் எண்ணெயை ஏற்றிக் கொண்டு கடந்த டிசம்பர் 15ம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தது.
இந்தக் கப்பல் தனது பயணத்தில் இருந்தபோதே தென் கொரியாவின் இதன் நிறுவனம் திவாலாகிவிட்டது.
இந் நிலையில் சென்னை வந்து சேர்ந்த இந்தக் கப்பல் சரக்குகளை இறக்கிய பின்னர் துறைமுகத்துக்கான வாடகை மற்றும் ஏஜென்ட் செலவுகளை கட்ட பணமில்லை.
நிறுவனம் திவாலாகிவிட்டதால் பணமில்லை என்று கப்பல் உரிமையாளர்கள் கைவிரித்துவிட்டனர். பணம் கட்டாததையடுத்து 25 ஊழியர்களுடன் இக்கப்பல் துறைமுகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்நிறுவனத்தின் 8 கப்பல்கள் உலகம் முழுவதும் பல்வேறு துறைமுகங்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு சம்பளம் கொடுத்தே 4 மாதங்களுக்கு மேல் ஆகிவி்ட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு, கப்பலின் உரிமையாளர்களுடன் பணத்தை கட்டிவிட்டு கப்பலை மீட்டு செல்வது மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அந்த வமைப்பை சேர்ந்த ஆய்வாளர் ஸ்ரீகுமார் கூறுகையில், பொருளாதார பின்னடைவு கப்பல் துறையையும் அதிகம் பாதித்துள்ளது. பல நிறுவனங்கள் திவாலாகிவிட்டன. இது போன்று கப்பல் பிடித்து வைக்கப்படுவது, தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. சென்னையில் இது தான் முதல் முறை. ஊழியர்களின் நலன் பற்றி தான் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம் என்றார் ஸ்ரீகுமார்.
இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க கப்பல்கள் துறைமுகத்துக்குள் நுழையும் முன்னதாகவே பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி யூரியா ஏற்றி வந்த வியட்நாமின் வினாசின் என்ற கப்பலும் 23 ஊழியர்களுடன் பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications