இல்லாத ஊழியர்கள் பெயரில் ரூ.960 கோடி சுருட்டல்!
மும்பை: இது ராமலிங்க ராஜுவின் மோசடி நெம்பர் 3. இதில் அவர் இல்லாத ஊழியர்கலின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றும் திருவிளையாடல் மூலம் ரூ. 960 கோடிக்கும் மேல் சுருட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் முழுவதும் கைது செய்யப்பட்ட ராமலிங்க ராஜூவின் வெளிநாட்டு வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இந்த மோசடியை அவர் கடந்த 5 ஆண்டுகளாக செய்து வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த வங்கிக் கணக்கு விவரங்களையும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று இரவு அம்பலப்படுத்தியுள்ளது.
கேஎப்சி (Know your customer) என்பது வாடிக்கையாளர் குறித்து முழுமையான தகவலை அறிந்து கொள்ள உதவும் முறை. இங்கும் ராமலிங்க ராஜூ, சத்யம் நிறுவனம் தொடர்பாக தவறான தகவல்கள் அளித்து, விதிமுறைகளை மீறியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதில் சத்யம் நிறுவனத்தின் நிர்வாகிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த 6,000 போலி கணக்குகளில் உள்ள பணமும், வெளிநாட்டு வங்கிகளில் ராஜுவுக்கு உள்ள 40க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சரியாக இந்தத் தொகை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதிர்வுக்கு வரும் வகையில் டெபாஸிட் செய்யப்பட்டிருப்பதாகவும் கிடைத்துள்ள ஆவணங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications