சத்யம் நிறுவன பங்குகளின் மதிப்பு 19% உயர்வு
மும்பை: சத்யம் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு இன்றும் உயர்ந்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேரத்தின் முடிவில் 19 சதவீத அளவுக்கு பங்கு மதிப்பு உயர்ந்தது.
உலக தகவல் தொழில்நுட்பத் துறையை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டு ராஜு சகோதரர்கள் சிறைக்குப் போய் விட்டனர்.
அடுத்து என்னாகுமோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அரசு இயக்குநர் குழுவை நியமித்ததைத் தொடர்ந்து உலகளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சரிந்து போய் விட்ட சத்யம் நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் 19 சதவீத அளவுக்கு உயர்வைக் கண்டன சத்யம் நிறுவன பங்குகள்.
இன்றைய நிலவரப்படி சத்யம் பங்கின் மதிப்பு ரூ. 35.25 ஆக உள்ளது.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் சத்யம் பங்குகளுக்கு உயர்வு காணப்பட்டது. வர்த்தகத்தின் முடிவில் பங்கின் மதிப்பு ரூ. 33.95 ஆக இருந்தது.