ஈழத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை: தங்கபாலுவிடம் சோனியா
இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் வேகம் பிடித்துள்ளது. இன்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று திடீரென தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.
அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
இலங்கையில் ராணுவம் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளால் தமிழர்கள் பெரும் பாதி்ப்புக்குள்ளாகியிருப்பது குறித்து தங்கபாலு, சோனியாவிடம் எடுத்துரைத்தார்.
அதற்கு சோனியா, இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் தமிழக மக்கள் விருப்பப்படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
ஈழத் தமிழர்களை பாதுகாப்பது தொடர்பாகத்தான் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு சென்று பேச்சு நடத்தி வந்துள்ளார். எனவே ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்று தெரிவித்தாராம்.