திருமங்கலம் எல்லாமே முடிந்து விட்டது - கோபாலசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு, எல்லாமே நடந்து முடிந்து விட்டது என பதிலளித்துள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி.
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஏராளமான நிருபர்கள் சந்தித்தனர்.
அப்போது, திருமங்கலம் இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு, எல்லாமே நடந்து முடிந்து விட்டது. இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார் கோபாலசாமி.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்க முயன்றபோது பதில் ஏதும் அளிக்காமல் காரில் ஏறி விரைந்தார்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications