தூத்துக்குடியில் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பரவி வரும் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவங்காடு, சவேரியர்புரம், பழைய காயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த பொதுமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு கடந்த இருநாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதில் ஏரல் அம்மாதோப்பு பகுதியை சேர்ந்த குணசெல்வம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று வரை தூத்துக்குடி மூனுசென்ட் அந்தோணியர்புரம், முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளை சேர்ந்த மேலும் 50 பேர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை அருகேயுள்ள வடக்கு சிலுக்கன் பட்டியை சேர்ந்த ராஜ்குமார் மகன் ராஜாசெல்வம் என்ற குழந்தையும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையில் இன்று காலை இறால் கம்பெனியில் வேலை பார்த்து வந்த முனுசென்ட் அந்தோணியர்புரத்தை சேர்ந்த முருகன் என்பவர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இவருடன் சேர்ந்து வாந்தி பேதிக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதுவரை 22 பெண்கள் உள்பட 41 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏரல் பகுதியில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 7 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications