For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பில் தகவல் தொடர்பு தற்காலிகமாக துண்டிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு அங்கு தகவல் தொடர்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன.

'தங்கள் உடைமைகளையே அழித்துவிட்டுப் பின்வாங்கி, நேரம் வரும்போது தாக்குவது' என்று ஒரு யுத்த தந்திரம் உண்டு. இந்த தந்திரத்தைப் பயன்படுத்தியே ரஷ்யப் படைகள் 1812-ல் நெப்போலியனையும், 1941-ல் ஹிட்லரின் நாஜிப் படைகளையும் (மொத்தம் 15 லட்சம் வீரர்கள் இறந்த சோக வரலாறு அது) தோற்கடித்தனர்.

ஈழப் போர்முனைகளிலிருந்து வரும் செய்திகள் கிட்டத்தட்ட இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.

வன்னியிலுள்ள ஒரு செய்தியாளர், ராணுவத்தின் இழப்பு கணக்கெடுக்க முடியாத அளவுக்கு உள்ளதாகவும், வெள்ளம் பூரணாக வடிந்தபிறகே அறுதியிட்டுக் கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பலியானோர் எண்ணிக்கை குறித்து புலிகள் தரப்பு மவுனம் காப்பதில் வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்கிறார்கள்.

தங்களிடம் அகப்பட்டுள்ள ராணுவத்தினரிடம் ஆயுதங்களைப் பறித்துவிட்டு புலிகள் துரத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொழும்பு நகருக்கு தகவல் தொடர்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புலிகளின் தாக்குதல் குறித்த முழு தகவலும் உலகுக்குத் தெரிய வரும்பட்சத்தில் இலங்கை அரசு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வரும்.

பெரிய நாடுகளின் ஆதரவு மற்றும் படை பலத்துடன் புலிகளை எதிர்த்துப் போரிட்டும், முன்னெப்போதும் இல்லாத பேரழிவைச் சந்திக்கும் கட்டத்துக்கு ராணுவம் வந்துள்ளதால், இலங்கை அரசும், ராணுவமும் பெரும் சிக்கலில் உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X