சென்னை பெண்மணிக்கு விசா கிடைக்க உதவிய ஒபாமா
சென்னை: சென்னையைச் சேர்ந்த சுஜாதா அட்சுமிலி என்ற பெண்ணிக்கு கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்கா செல்ல விசா கிடைக்க பாரக் ஒபாமா உதவிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உலக மக்களின் உள்ளத்தை ஈர்த்துள்ளது பழைய செய்தி. ஆனால் 2004ம் ஆண்டே சென்னையைச் சேர்ந்த சுஜாதா அட்சுமில்லி என்ற பெண்மணியின் குடும்பத்தினரை தனது செயலால் வெகுவாக கவர்ந்து விட்டார் ஒபாமா என்பது புதிய செய்தி.
இதுகுறித்து சுஜாதாவின் மூத்த மகன் ரமேஷ்குமார் கூறுகையில், எனது தாயார் சுஜாதா கணவரை இழந்தவர். எனது தம்பி விஜயக்குமார் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவர் கடந்த 2004ம் ஆண்டு புதிதாக வீடு கட்டினார். இந்த கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு எனது தாயாரை அழைத்திருந்தார் விஜயக்குமார்.
இதையடுத்து விசா கோரி சுஜாதா, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவர் விதவை என்பதால் அமெரிக்கா சென்று தனது மகனுடன் செட்டிலாகி விடுவார் என்று கூறி விசா தர மறுத்து விட்டது தூதரகம்.
எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதையடுத்து அப்போது இல்லினாய்ஸ் மாகாண செனட்டராக இருந்த பாரக் ஒபாமாவுக்கு நிலைமையை விளக்கி விஜயக்குமார் கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்தைக் கண்ட ஒபாமா, உடனடியாக வாஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் சென்னையில் உள்ள துணை தூதரகங்களுக்கு கடிதம் எழுதி, சட்ட விதிமுறைகளின்படி எங்களது தாயாரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்க தூதரகம், எனது தாயாருக்கு 10 ஆண்டுக்கான பலமுறை சென்று வரக் கூடிய விசாவினை வழங்கியது.
இதையடுத்து 2005ம் ஆண்டு அமெரிக்கா சென்ற எனது தாயார் அங்கு தம்பி வீட்டு கிரகப் பிரவேசத்தில் கலந்து கொண்டார்.
விசா கிடைக்க பெரும் உதவி புரிந்த ஒபாமாவுக்கு நேரில் நன்றி சொல்ல அவரது அலுவலகத்திற்கும் போனார். ஆனால் அப்போதுதான் ஒபாமா அலுவலகத்தை விட்டு கிளம்பிப் போயிருந்ததால், அவரை சந்திக்க இயலாமல்
போய் விட்டது.
இருப்பினும் ஒபாமா அலுவலக ஊழியர்கள் எனது தாயாரை சிறந்த முறையில் வரவேற்று கெளரவித்தனர். கண்டிப்பாக எனது தாயாரின் நன்றிகளை ஒபாமாவிடம் தெரிவிப்பதாகவும் உறுதியளித்து அனுப்பி வைத்தனர் என்றார் ரமேஷ்குமார்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்!












Click it and Unblock the Notifications