For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக் கடையில் தேசியக் கொடி ஏற்ற பணியாளர் சங்கம் முடிவு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: அரசு அலுவலகங்களை போல் குடியரசு தினமான நாளை டாஸ்மாக் கடைகள் முன்பும் தேசியக் கொடி ஏற்றப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் அறிக்கையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 5 நாட்கள் மட்டுமே விடுமுறை உள்ளது. எனவே, இந்தாண்டு முதல் குடியரசுத் தினத்தன்று விடுமுறை எடுத்துக் கொள்ள தீர்மானம் செய்துள்ளோம்.

அரசு அலுவலகங்களை போல், டாஸ்மாக் கடைகள் முன்னாலும் தேசிய கொடி ஏற்ற முடிவு எடுத்துள்ளோம்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கிய விடுமுறை நாட்களில் கூட விடுமுறை வழங்கப்படுவதில்லை. குடியரசு தினத்தை முன்னிட்டு 26ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக பணியாளர் அனைவரும் விடுப்பு எடுத்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

அன்று பல பணியாளர்கள் விடுமுறையில் சென்றுவிடுவதால் டாஸ்மாக் கடை அனைத்தும் மூடப்படும் என்கிறது அறிக்கை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X