தூத்துக்குடியில் ரூ.8,500 கோடியில் புதிய அனல் மின் நிலையம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத மிகுமின் நிலையமும் இணைந்து புதிய அனல் மின் நிலையம் அமைக்க உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் உடன் குடியில் தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத மிகுமின் நிலையமும் இணைந்து ரூ. 8 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் 1600 வோல்ட்ஸ் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்க உள்ளது.
இதற்கான துவக்க விழா பிப்ரவரி 4 -ம் தேதி நடைபெற உள்ளது.
விழாவில் மத்திய மின்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழக மின்சார வாரிய சேர்மன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications