ஹெராயினுடன் பிடிபட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழக மாஜி இயக்குநர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மண்டல போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் சாஜி மோகன், ரூ. 1 கோடி மதிப்புள்ள ஹெராயினை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், நேற்று ஷாஜி மோகனைக் கைது செய்தனர்.
இதுகுறித்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ரகுவன்ஷி கூறுகையில், போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழக முன்னாள் மண்டல இயக்குநர் ஷாஜி மோகன். இவரிடமிருந்து ஒரு கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 1 கோடியாகும்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
போதைப் பொருள் கட்டுப்பாட்டுக் கழக முன்னாள் இயக்குநர் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications