தீவிரவாதத்தைத் தடுக்க மும்பையில் மக்கள் படை தொடக்கம்
மும்பை: தீவிரவாதத் தாக்குதல் போன்ற நெருக்கடியான நேரத்தில் காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் போன்றோருக்கு உதவ பல்வேறு தரப்பு மக்களை உள்ளடக்கிய மக்கள் படை 24x7 என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படையில், மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிற பொதுமக்கள் இடம் பெற்றுள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்த அமைப்பு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்.
ஏற்கனவே மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து போர்ஸ் -1 என்ற பெயரில் கமாண்டோ படையை உருவாக்கப் போவதாக மகாராஷ்டிர அரசு கூறியிருந்தது. ஆனால் அது இதுவரை உருவாக்கப்படவில்லை.
ஆனால் மக்கள் இணைந்து ஒரு புதிய படையை உருவாக்கி விட்டனர்.
இதுகுறித்து மாணவி கவிதா மாலிக் கூறுகையில்,இந்த அமைப்பில் மாணவ, மாணவியர், பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். எத்தகைய நெருக்கடி நிலை ஏற்பட்டாலும் நாங்கள் அங்கு இருப்போம்.
குறிப்பாக தீவிரவாதத்தை வேரறுப்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்றார்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.எஸ்.ஷிண்டே கூறுகையில், நெருக்கடி கால நிர்வாகம், அவசர காலங்களில் எப்படி செயல்படுவது, ஆயுதங்களைக் கையாளுவது எப்படி, இரவு நேரப் பயிற்சி உள்ளிட்டவை இந்த அமைப்பில் இருப்பவர்களுக்குத் தரப்படும்.
மேலும் தீயணைப்புப் பயிற்சியும், தீவிபத்துக்களின்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படும் என்றார்.
தொடக்கத்தில் இரு படைகளுடன் இந்த மக்கள் படை செயல்படத் தொடங்கும். மே மாத இறுதிக்குள் இது 54 படைகளாக உயர்த்தப்படவுள்ளதாம்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications