For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எய்ம்ஸ் மருத்துவமனையை சூழ்ந்த பனி மூட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பனியால் மூடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

டெல்லியில் சமீபகாலமாக பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

எதிரே வருபவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு பனி இருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர் தங்கியிருக்கும் அறைக்கு செல்லும் வழி முழுவதும் விசேஷ பாதுகாப்பு குழுவினரும், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் இடங்களில் டெல்லி போலீசாரும் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்புக்கு இருக்கும் சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பனிமூட்டம் அதிகரித்ததை அடுத்து பிரதமருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இது வழக்கமான ஒன்று தான் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X