For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 9 காவல்துறை எஸ்.பிக்கள் மாற்றம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 9 காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாநில அரசின் உள்துறைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கை:

- கோவை புறநகர் எஸ்.பி. ஜி.கார்த்திகேயன், கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு விசேஷ போலீஸ் படை 4-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

- கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு விசேஷ போலீஸ் படை 4-வது பட்டாலியன் கமாண்டண்ட் தேன்மொழி, மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

- சிவகங்கை மாவட்ட எஸ்.பி. டாக்டர் கண்ணன் கோவை எஸ்.பியாகிறார்.

- சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் காமினி, கோவை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை ஆணையராகியுள்ளார்.

- கோவை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கே.சண்முகவேல், கோவை நகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

- திருச்சி ரெயில்வே எஸ்.பி. என்.ராஜசேகரன் சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

- கோவை நகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை ஆணையர் ராஜேந்திரன், திருச்சி ரெயில்வே எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

- எஸ்.பி. ரவீந்திரன் சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

- சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்.பி. திருஞானம் சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X