இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படங்களை அவமரியாதை செய்தவர் கைது!
ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் காந்தி மைதானத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் காந்தி மைதானத்தில் நேற்று முன் தினம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது படங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்தது.
இத்தகவல் அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படங்களை அவமரியாதை செய்த நபரை கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து வந்தனர்.
தீவிர விசாரணைக்கு பின் இச்சம்பவத்திற்கு காரணமான அந்தியூர் பொய்யேரிகரை பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சர் இளங்கோவன் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் என்பது குறிப்பிடதக்கது.