பெட்ரோல் ரூ. 5, டீசல் ரூ. 2, காஸ் ரூ. 25 விலை குறைப்பு
டெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை மத்திய அரசு நேற்று குறைத்தது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ. 5, ரூ. 2 என குறைக்கப்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 25 குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து மத்திய அரசு பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலையில் 2 ரூபாயும் குறைத்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரேபரோலியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்கலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று இரவு பொருளாதார விவகாரம் குறித்த கேபினட் கூட்டத்தில் விலைகுறைப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. மேலும், சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 25 விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வ்நதுள்ளது.
அமைச்சரவைக் கூட்ட முடிவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்து இருப்பதால் அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு குறைத்து இருக்கிறது என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு - முடிவேதும் இல்லை
பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல்.லின் செல்போன் சேவைக்காக சமீபத்தில் 3ஜி ஸ்பெக்ட்ரம்' (மூன்றாம் தலைமுறை அலைவரிசை) அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மத்திய மந்திரிசபை கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்த விவகாரத்தை அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்புவது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மேலும் தாமதம் ஆகியுள்ளது.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications