Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனப்படுகொலையைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில், போருக்கு எதிரான பத்திரிக்கையாளர் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது, பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றை குறித்து விசாரிக் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து இந்த அமைப்பினர் கூறுகையில், 2006ம் ஆண்டு முதல் இதுவரை இலங்கையி்ல 16 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்படடுள்ளனர்.

இலங்கை அரசு போரின்போது செய்து வரும் முறைகேடுகளையும், கொடூரங்களையும் அப்பட்டமாக செய்தி வெளியிட்டதற்காக சன்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா கொல்லப்பட்டார் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் நக்கீரன் கோபால், குணசேகரன், பாரதி கண்ணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இலங்கை பத்திரிக்கையாளர் சுனந்தன் என்பவரும் பங்கேற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+