கச்சா எண்ணையை மக்கள் அள்ளியபோது தீவிபத்து - 111 பேர் பலி
மோலோ (கென்யா): கென்யாவின் மோலோ நகரில் டேங்கர் லாரியிலிருந்து சாலையில் சிந்திய கச்சா எண்ணையை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளியபோது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 111 பேர் உடல் கருகி பலியாயினர்.
சமீப காலத்தில் கென்யாவில் நடந்த மிக மோசமான தீவிபத்தாக இது கருதப்படுகிறது.
மோலோ நகரின் மத்திய ரிப்ட் வேலி பகுதியில், ஒரு டேங்கர் லாரி கச்சா எண்ணையுடன் போய்க் கொண்டிருந்தது. அப்போது லாரி விபத்துக்குள்ளாகி நின்று விட்டது.
அதிலிருந்து கச்சா எண்ணை கொட்டத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து பல்வேறு பாத்திரங்கள், டிரம்கள், வாளிகள் உளளிட்டவற்றில் எண்ணையை அள்ளத் தொடங்கினர்.
ஆனால் கச்சா எண்ணையை அள்ளாதீர்கள், தீவிபத்து ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளதாக காவல்துறை எச்சரித்தனர். ஆனால் அதை மக்கள் கேட்பதாக இல்லை.
இந்த நிலையில் தீப்பிடித்துக் கொண்டது. படு வேகமாக பரவிய தீயில் சிக்கி 91 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
பல உடல்கள் அடையாளமே தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டன.
எண்ணையை அள்ளிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் சிகரெட் பற்ற வைத்து தீக்குச்சியைக் கீழே போட்டதால்தான் இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications