For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸி. ஒபனில் அசத்திய பூபதி, சானியா, பாம்பிரிக்கு உற்சாக வரவேற்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

மும்பை: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் கலப்பு இரட்டையர் பட்டம் வென்ற இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா மற்றும் ஜூனியர் ஒற்றையரில் கோப்பை கைப்பற்றி சாதித்த யுகி பாம்பிரி ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்தது.

இதில், கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று கலப்பு இரட்டையரில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.

மேலும், சானியா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

அதேபோல ஜூனியர் ஒற்றையர் பட்டத்தை யுகி பாம்பிரி வென்றார்.

இன்று காலை சானியாவும், பூபதியும் நாடு திரும்பினர். மும்பபை திரும்பிய அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் திரண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல் யுகி பாம்பிரி நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அப்போது அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X