வன்னியில் விமானப்படை தாக்குதலில் 18 தமிழர்கள் படுகொலை

மக்கள் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இலங்கைப் படையினர் நேற்று இரவு நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
மூங்கிலாற்றில் தமிழர் குடியிருப்புக்கள் மீது விமானப்படையினர் பாராசூட் குண்டுகளை வீசித் தாக்கினர். இரவு பத்தரை மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இதில், 12 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனையை குறி வைத்து இரவு 11 மணியளவில் எறிகணை, பல்குழல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் பெண் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு பகுதியில் குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications