For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை திமுக செயற்குழு: இலங்கை தொடர்பாக முக்கிய முடிவு?

By Sridhar L
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திமுக செயற்குழுக் கூட்டம் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாக இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளை திமுக செயற்குழு கூடுகிறது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், நாளைய கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என தெரிகிறது.

நாளைய கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் மத்திய அரசுக்கு எதிரான கடுமையான முடிவு எதுவும் எட்டப்பட மாட்டாது என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X