For Daily Alerts
Just In
தமிழகத்தைப் போல புதுவையிலும் கல்லூரிகள் மூடல்
புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் அனைத்துக் கல்லூரிகளையும் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் மாணவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் போராட்டம் வலுவடைவதைத் தடுக்கும் வகையில் கல்லூரிகளையும், விடுதிகளையும் அரசு மூட உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டுள்ளது. விடுதிகளையும் மூட அது உத்தரவிட்டிருக்கிறது.
Story first published: Monday, February 2, 2009, 9:22 [IST]