சாயல்குடியில் குடிநீர் பஞ்சம் - குடம் ரூ.4க்கு விற்பனை
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடம் தண்ணீர் ரூ. 4க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சாயல்குடி பகுதியில் சமீபத்தில் நல்ல மழை பெய்தும் கூட எந்த கண்மாயும் நிரம்பவில்லை. இதனால் கிணறுகளில் நீர்மட்டமும் உயரவில்லை.
இந்நிலையில் சாயல்குடி டவுனில் குடிநீர் ஊரணியோ, பேரூராட்சி கட்டுப்பாட்டில் போர் வசதியோ செய்து தரவில்லை.
ராஜகம்பீரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் குடிநீரும் சாயல்குடி நகர் பகுதிக்கு சரிவர வருவதில்லை. நரிப்பையூரின் உப்பு நீரை நண்ணீராக்கும் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரையும் பொதுமக்கள் குடிநீராக பருகுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் சாயல்குடி டவுனில் குடிநீர் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது.
இந்நிலையில் ஆற்றுப்பகுதியில் இருந்து டிராக்டர் மூலம் எடுத்துவரப்பட்ட குடிநீர் ரூ.4க்கு ஒரு குடம் என்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் என்பது சாயல்குடி டவுன் பகுதியில் பெரும் அவஸ்தையை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம்தான் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்குமா என சாயல்குடி டவுன் மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications