சத்யம் தலைவராக ஏஎஸ் மூர்த்தி நியமனம்!
Subscribe to Oneindia Tamil

சத்யம் நிறுவனத்துக்கு புதியவரல்ல மூர்த்தி. மோசடிக் குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு தலைமையிலான நிர்வாகத்தில் இவர்தான் கடந்த 15 ஆண்டுகளாக சத்யம் நிறுவன சர்வதேசப் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர்.
இவருக்கு ஆலோசகர்களாக பார்தோ எஸ் தத்தா மற்றும் ஹோமி குஷ்ரோகான் ஆகியோரை நியமித்துள்ளது சத்யம் இயக்குநர் குழு.
இதைத் தொடர்ந்து உடனடியாக நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்கிறார் மூர்த்தி, இன்று முதல் நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் மூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இன்னொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது சத்யம் நிறுவனத்துக்கு. இந்தியாவின் பல்வேறு வங்கிகள் இந்த நிறுவனத்துக்கு ரூ.600 கோடி கடன் வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications