For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடையார்கட்டு மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்: 43 பேர் பலி

By Sridhar L
Google Oneindia Tamil News

வன்னி: சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனங்களை அலட்சியப்படுத்திவிட்டு, புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் மருத்துவமனைகளைத் தொடர்ந்து வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீதும் நேற்றும் இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இலங்கை ராணுவம்.

இதில் நேற்று மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 155 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது வியாழக்கிழமை இலங்கை படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மருந்துக் கிடங்கும் முற்றாக சேதமடைந்துள்ளன.

இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக சேதமடைந்துள்ளதனால் வன்னியில் உள்ள மக்களுக்கு தற்போது சேவையாற்றி வருவது உடையார்கட்டு மருத்துவமனை மட்டுமே.

இந்த மருத்துவமனையையும் இலக்கு வைத்து இலங்கைப் படையினர் தொடர்ச்சியாக கொடூர எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான சுதந்திரபுரம், இருட்டுமடு, வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீது நேற்று முழுவதும் ராணுவத்தினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் பகுதியில் நேற்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் 10 உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இருட்டுமடுப்பகுதியில் இன்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

வள்ளிபுனம் பகுதியில் இன்று இலங்கை படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் இலங்கைப் படையினர் நடத்திய பல்குழல் வெடிகணைத் தாக்குதலில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுவரை வன்னிப் பகுதியில் மட்டும் கொல்லப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 1000-த் தொடுவதாகவும் காயம்பட்டோர் 4000-த் தாண்டுவதாகவும் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவமனைகளும் எங்கள் இலக்குதான்!

இந்த மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கேட்டுக் கொண்டபிறகு, தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது இலங்கை ராணுவம்.

மருத்துவமனைகளும் எங்கள் இலக்குகளில் உள்ளன என்று கோத்தபாய ராஜபக்சே ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

இதன் மூலம், மனிதப் பாதுகாப்பு வலயத்துக்கு வாருங்கள் என்று தமிழர்களை வேண்டுமேன்ற அழைத்து, குண்டுவீசிக் கூண்டோடு அழித்து வருகிறது இலங்கை அரசு என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X