உடையார்கட்டு மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்: 43 பேர் பலி
இதில் நேற்று மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 155 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது வியாழக்கிழமை இலங்கை படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மருந்துக் கிடங்கும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக சேதமடைந்துள்ளதனால் வன்னியில் உள்ள மக்களுக்கு தற்போது சேவையாற்றி வருவது உடையார்கட்டு மருத்துவமனை மட்டுமே.
இந்த மருத்துவமனையையும் இலக்கு வைத்து இலங்கைப் படையினர் தொடர்ச்சியாக கொடூர எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான சுதந்திரபுரம், இருட்டுமடு, வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீது நேற்று முழுவதும் ராணுவத்தினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதியில் நேற்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் 10 உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இருட்டுமடுப்பகுதியில் இன்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
வள்ளிபுனம் பகுதியில் இன்று இலங்கை படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவிபுரம் பகுதியில் இலங்கைப் படையினர் நடத்திய பல்குழல் வெடிகணைத் தாக்குதலில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை வன்னிப் பகுதியில் மட்டும் கொல்லப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 1000-த் தொடுவதாகவும் காயம்பட்டோர் 4000-த் தாண்டுவதாகவும் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மருத்துவமனைகளும் எங்கள் இலக்குதான்!
இந்த மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கேட்டுக் கொண்டபிறகு, தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது இலங்கை ராணுவம்.
மருத்துவமனைகளும் எங்கள் இலக்குகளில் உள்ளன என்று கோத்தபாய ராஜபக்சே ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
இதன் மூலம், மனிதப் பாதுகாப்பு வலயத்துக்கு வாருங்கள் என்று தமிழர்களை வேண்டுமேன்ற அழைத்து, குண்டுவீசிக் கூண்டோடு அழித்து வருகிறது இலங்கை அரசு என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு எழுந்துள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!













Click it and Unblock the Notifications