திருச்செந்தூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ்; 10 நிமிடத்தில் டிக்கெட் காலி
திருச்செந்தூர்: திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் டிக்கெட் விற்பனை துவங்கிய 10 நிமிடத்திலே விற்று தீர்ந்தது.
திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் தொடக்கவிழா நாளை மதியம் 1 மணிக்கு திருச்செந்தூரில் நடக்கிறது. இதில் ரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா மற்றும் உயரதிகாரிகள் கலந்து
கொள்கின்றனர்.
இந்த ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி ஓன்றும், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6ம், முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4ம், கார்டு பெட்டி 2ம்மாக 14 பெட்டிகள் உள்ளன.
இதற்கான முன்பதிவு திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்த்தன. மேலும் ஒரு மணி நேரத்தில் காத்திருப்போர் பட்டியல் 100ஐ தாண்டியது.
இந்நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி திருச்செந்தூர் ரயில் நிலையம் வந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் நாளை இயக்கப்படுகிறது. இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் தொடக்கி வைக்கிறார்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை வியாழக்கிழமை தோறும் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்கிறது. அதேபோல் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமைதோறும் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வருகிறது.
ஆறுமுகநேரி, காயல்பட்டிணம் ரயில் நிலையஙகளில் முன்பதிவு டிக்கெட் கோட்டா 6ல் இருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆறுமுகநேரி, காயல்பட்டிணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நேற்று காலை முதல் முன்பதிவு தொடங்கியது என்றார் ராதிகா செல்வி.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications