இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கருப்பு கொடி பேரணி
சென்னை: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று மாலை சென்னையில் கருப்புக் கொடியுடன் பேரணி நடைபெறுகிறது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பந்த் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் இன்று கருப்புக் கொடி பேரணி நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு மன்றோ சிலையில் இருந்து கருப்புக் கொடி ஏந்தி பேரணி செல்கிறது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பேரணி நிறைவடைகிறது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க தலைவர் இல.கணேசன், ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications