அனைவருக்கும் ரூ.500 லேப்டாப்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாணவர்களுக்கு ரூ.500க்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அனைவருக்கும் கம்ப்யூட்டர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 20 ஆயிரம் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு ரூ.500-க்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்பறங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்த லேப்டாப்கள் வழங்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் கல்வியை வழங்கும் நோக்கிலேயே இத்தகைய லேப்டாப்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவருக்குமே இத்தகைய லேப் டாப்புகள் வழங்கப்பட்டு விடுமாம். அனைத்து பகுதிகளும் இன்டர்நெட் மூலம் இணைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.500-க்கு கம்ப்யூட்டர் என்றதும், ஏதோ விளையாட்டு பொம்மை மாதிரி இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்... அனைத்து வசதிகளும் நிறைந்த லேப் டாப் இது. கம்ப்யூட்டருடன் விரிவுபடுத்தப்பட்ட மெமரி, லான், வை - பீ போன்ற நெட் வசதிகளுடன் முழுமையான சிஸ்டமாகவே இதைத் தரப்போகிறார்கள்.

இதற்கான எலக்ட்ரானிக் சாதன தொழில்நுட்பத்தை பெங்களூரு நகரில் உள்ள இந்திய இன்ஸ்ட்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. தயாரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+