எச்-1பி விசா வெட்டு: 'வேலை'யை ஆரம்பித்தது ஒபாமா அரசு!

இதனால், இந்தியப் பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கப் பொருளாதாரமே முடங்கியுள்ளது. எங்கும் வேலை இழப்புகள், நிறுவன மூடல், வங்கி மோசடி என கட்டுப்பாடிழந்த நிலையில் உள்ளது அமெரிக்கப் பொருளாதாரம்.
இதைச் சீர் செய்வதற்காக, பொருளாதார சலுகை திட்ட மசோதா ஒன்று, அமெரிக்க செனட் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிதி உதவி பெறலாம்.
ஆனால் இப்படி நிதி உதவி பெறும் நிறுவனங்கள் எச்-1 பி விசாக்கள் மூலம் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்தமும் நேற்று அமெரிக்க செனட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டப்படி இனி, அமெரிக்க அரசிடம் உதவி நிதி பெறும் நிறுவனங்கள், அமெரிக்கர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். மிகமிக அவசியம் எனக் கருதினால் மட்டுமே வெளிநாட்டவர் ஓரிரிருவரை பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த சட்டத் திருத்தம் மற்ற நாட்டுப் பணியாளர்களை இந்தியர்களையே அதிகம் பாதிக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications