செந்தூர் எக்ஸ்பிரஸ்-வாரம் 5 நாள் இயங்கும்
திருச்செந்தூர்: திருச்செந்தூர்-சென்னை இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
இந்த ரயில் சேவையை லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருச்செந்தூர் தைப்பூச திருநாளுக்கு பெயர் பெற்றதாகும். இந்த நல்ல நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் வேண்டுகோளை ஏற்று இந்த ரயிலுக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவித்த நகரங்களோடு ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் ஆகிய ஊர்களிலும் இந்த ரயில் நின்று செல்லும். தற்போது இந்த ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும். பின்னர் அது தினமும் ஓட வகை செய்யப்படும். நான் பதவிக்கு வந்தபின் தமிழகத்துக்கு நிறைய ரயில்கள் விட்டுள்ளேன்.
இந்திய ரயில்வே மிகப்பெரிய துறை. பாஜக ஆட்சியில் அதன் நிலைமை மோசமாகிவிட்டது. இந்தியா ஒளிர்கிறது என்று சொன்னார்கள். ஆனால் ரயில்வே நஷ்டம் கண்டது.
நான் இந்த துறைக்கு அமைச்சரான பின்பு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி லாபம் கிடைக்கிறது. ரயில்வே பணம் ரூ.1 லட்சம் கோடியை சேமித்துள்ளோம்.
அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர்கள் மற்றும் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள், பேராசிரியர்கள் எப்படி இது சாத்தியம் என ஆச்சர்யப்பட்டனர்.
எனக்கு இந்திய பொருளாதாரமும் தெரியும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் தெரியும். நான் அடித்தட்டு குடும்பத்தில் இருந்து வந்தவன். அவர்களுக்கு தகுந்தாற் போல ரயில்வே துறையில் மாற்றங்களை ஏற்படுத்தினேன். ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணத்தை குறைத்தேன்.
இதனால் பாமர மக்களும், ஏழை மக்களும் ரயிலில் அதிகமாக பயணம் செய்ய தொடங்கினார்கள். இதனால் ரயில்வே துறை இன்று லாபத்தில் இயங்குகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதி மிகத் திறமையானவர். அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராதிகா செல்வியும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அவரால் தான் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் அகல ரயில்பாதை உங்களுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் லாலு.
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications