சோனியாவின் அருள்நெஞ்சம்-எஸ்ஆர்பி புகழ்ச்சி
சென்னை: போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொது மக்களும், ஐ.நா. ஊழியர்கள் குடும்பத்தினரும் சென்றுவிட்டால் தங்களுடைய எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று புலிகள் அச்சம் கொள்வதால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் கவலை அளிப்பதாக உள்ளது.
புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதான பேச்சுக்கு இடம் அளிக்கும் வகையில் சரணடைய வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள், போப்பாண்டவரின் தூதர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொது மக்களும், ஐ.நா. ஊழியர்கள் குடும்பத்தினரும் சென்றுவிட்டால் தங்களுடைய எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று புலிகள் அச்சம் கொள்வதால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு புலிகளால் தடுத்து நிறுத்தப்படுவது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சி மீதும், மத்திய அரசு மீதும் அபாண்டமாக பழிசுமத்தி வைகோ அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவரது அறிக்கை உண்மைக்கு மாறாக திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
விடுதலைப் புலிகளை பழிவாங்கும் நோக்கத்தோடுதான் சோனியா செயல்படுகிறார் என்று கூறும் நிலைக்கும் சிலர் சென்றிருக்கிறார்கள். ராஜீவ் படுகொலையில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட நளினிக்கு உயிர் பிச்சை அளித்த அருள்நெஞ்சம் கொண்ட சோனியாவின் இரக்க சிந்தனையை கூட இவர்கள் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை.
எப்படியாவது விடுதலைப் புலிகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஆத்திரம்தான் இவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கும், நெடுமாறன், வைகோ போன்றோருக்குமிடையே மிக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்த உறவை பயன்படுத்தி போர் பகுதியில் சிக்கி கொண்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற புலிகளை அவர்கள் கேட்டு கொள்ள வேண்டும். அதன் மூலமாக அப்பாவி தமிழர்களை உயிரோடு மீட்க முடியும்.
மேலும் ஆயுதங்களை துறந்து, அமைதி பேச்சு வார்த்தை நடத்த இந்த வாய்ப்பை புலிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் வலியுறுத்த வேண்டும் என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications