மதுரை வி.சி. பிரமுகர் மீது குண்டர் சட்டம்
மதுரை: பஸ் உடைப்பு சம்பவம் தொடர்பாக மதுரையில் விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந்த ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
அப்போது மதுரையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால் குண்டர் பாயும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மாத்தூர் பகுதியில் பஸ் மீது கற்கள் சராமரியாக வீசப்பட்டன. இதில் பஸ் ஒன்று முழுவதுமாக சேதமானது.
இந்த சம்பவத்துக்கு காரணமான ஒத்தக்கடை அருகே உள்ள மாத்தூர் காலனியை சேர்ந்த் 28 வயதான அய்யாச்சாமி என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார். அவரை கைது செய்த போலீசார் மதுரை ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications