பங்கு வர்த்தகம்: இன்றும் ஜோர்!
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் திங்கள் கிழமை நிலவிய சாதக நிலையின் தொடர்ச்சியாகவே இன்றும் காணப்படுகிறது.
காலை வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் சாதாரணமாக இருந்த வர்த்தகம், பிற்பகல் 12 மணிக்குப் பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்தது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்து 9709 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 2950 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறி பங்குகள்: டிஎல்எப், ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் குழுமம், யுனிடெக், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.
செய்ல், ஓஎன்ஜிஸி மற்றும் பார்தி ஏர்டெல் போன்றவை நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க, ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று சற்றே நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அது இன்றைய வர்த்தகத்தில் எந்தளவு எதிரொலிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.