அறக்கட்டளைக்கு நிலம்-சிக்கலில் சாவ்லா

நவீன் சாவ்லா தலைவராகவும், அவரது மனைவி ரூபிகா செயலாளராகவும் உள்ள இரு அறக்கட்டளைகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஜெய்ப்பூர் கோர்ட் ஒன்று உத்தரவிட்டுள்ளதால், நவீன் சாவ்லாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பாஜக தொண்டர் இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2000மாவது ஆண்டு நவீன் சாவ்லாவைத் தலைவராகவும், அவரது மனைவிய செயலாளராகவும் கொண்ட இந்த இரு அறக்கட்டளைகளுக்கும், ஜெய்ப்பூர் நகரில் நிலம் ஒதுக்கப்பட்டது.
முறைப்படி பதிவு செய்வதற்கு முன்பாகவே 25,000 சதுர மீட்டர் நிலத்தை இரு அறக்கட்டளைகளுக்கும், ஜெய்ப்பூர் வளர்ச்சி ஆணையம் ஒதுக்கி விட்டது. இது சட்டவிரோதமாகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நவீன் சாவ்லாவும், அவரது மனைவியும் நெருக்கமானவர்கள் என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அசோக் கெலாட் அரசு அவசரம் அவசரமாக நில ஒதுக்கீட்டை சாவ்லாவுக்காக செய்து முடித்தது.
மேலும் அடிமாட்டு விலைக்கு இந்த நிலத்தை இரு அறக்கட்டளைகளுக்கும் ராஜஸ்தான் அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த நிலத்தை தனது அறக்கட்டளைகளுக்கு ஒதுக்குவதில் வேகம் காட்டாறுமாறு தனது அதிகாரப்பூர்வ லெட்டர் பேட் மூலம் இரு கடிதங்களை, ஜெய்ப்பூர் வளர்ச்சி ஆணையத்திற்கு இரு கடிதங்களை எழுதியுள்ளார் சாவ்லா.
எனவே இந்த நில ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இப்புகார் குறித்து விரிவான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இப்போதும் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுதான் உள்ளது, அசோக் கெலாட்தான் முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications