தொடங்கியது பெங்களூர் விமானக் கண்காட்சி
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சர்வதேச கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடக்கும். எலஹங்காவில் உள்ள இந்திய விமானப் படை மையத்தில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் இந்தியா உள்பட 25 நாடுகளைச் சேர்ந்த 592 விமான நிறுவனங்கள், ஆயுத நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த கண்காட்சியில் பல பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7வது முறையாக நடக்கும் இந்தக் கண்காட்சியில் முதல் முறையாக இந்த ஆண்டு சீனா பங்கேற்கிறது. அந் நாட்டு விமானப் படை துணைத் தலைவர் தலைமையில் பெரிய குழு பெங்களூர் வந்துள்ளது.
இதைத் தவிர அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஆஸ்திரேலியா, செக், பெல்ஜியம் உள்பட விமான, ஆயுதத் துறையில் முன்னணியில் உள்ள நாடுகளும் இதில் பங்கேற்று தங்களது நவீன போர் விமானங்கள், பயணிகள் விமானங்கள், ஆயுதங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் ஆகியவற்றை காட்சியில் வைத்துள்ளன.
5 நாட்களும் இந்த நாடுகளின் போர் விமானங்களின் சாகஸ நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. மேலும் இந்த நாடுகள் பல அரங்குகளையும் அமைத்து தங்களது விமானங்கள், ஆயுதங்கள் குறித்த விளக்க நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளன.
இதில் அமெரிக்காவின் எப்-16, எப்-18, சூப்பர் ஹார்னர், சி-17 சரக்கு விமானம், ரஷ்யாவின் மிக் 35டி, சுகோய், ஏஎன்-13 சரக்கு விமானம், ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்பான ஈரோ பைட்டர், இங்கிலாந்தின் ஹாக், ஆளில்லா உளவு விமானம், இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் ஆகிய போர் விமானங்கள் தங்களை செயல்பாடுகளை விளக்கி சாகஸ நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளன.
இந்தியா தயாரித்துள்ள ஐஜேடி விமானம், துருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் சாகஸங்கள் செய்து காட்டும்.
மேலும் எம்ப்ரேயர், ஜெட் லெகசி, சைடேசன் ஆகிய பயணிகள் விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களுடன் பெங்களூரில் தரையிறங்கியுள்ளன.
இந்த விமானக் கண்காட்சி இந்திய பாதுகாப்புத்துறையின் உதவியோடு நடத்தப்படுகிறது. இதில் சீனா தவிர பிரான்ஸ், பெரு, பொலிவியா, சுரினாம், மங்கோலியா, ஓமன், மாலத்தீவுகள் நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் உள்பட 40 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானக் கண்காட்சி நடக்கும் பகுதி முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய விமானப் படை 126 போர் விமானங்களையும், 197 ஹெலிகாப்டர்களையும் வாங்க திட்டமிட்டுள்ளது. பல பில்லியண் டாலர் மதிப்புள்ள இந்த காண்ட்ராக்டை வெல்ல அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, செக் ஆகிய நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தங்களது எப்-16, 18 ஆகிய விமானங்களை வாங்குமாறு அமெரிக்காவும், மிக்-35 டியை வாங்குமாறு ரஷ்யாவும் இந்தியாவை நெருக்கி வருகின்றன. அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுத் தயாரிப்பான ஈரோ பைட்டரை விற்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் ஆகியவை இறங்கியுள்ளன.
அதே போல ஹெலிகாப்டர்களை விற்கவும் அமெரிக்காவின் பெல், ரஷ்யா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே இந்தியா தயாரித்துள்ள துருவ் ஹெலிகாப்டர்களை இந்தக் கண்காட்சியில் ஈக்வடார் வாங்கவுள்ளது.
இன்று காலை இந்திய விமானப் படையின் போர் விமானங்களின் சாகஸங்களுடன் இந்த கண்காட்சி தொடங்கியது. சுகோய் 30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21, ஹாக் ஆகிய விமானங்களும், கிரண் ரக பயி்ற்சி விமானங்கள், இந்தியா தயாரித்துள்ள எல்சிஏ தேஜாஸ் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மலைக்க வைக்கும் சாகஸங்களை நிகழ்த்திக் காட்டின.
நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் காட்டி பார்வையாளர்களை குதூகலமிட வைத்தது இந்திய விமானப் படை.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி













Click it and Unblock the Notifications