பான் கி மூனுக்கு கோடிக்கணக்கில் தந்திகள்: பழ.நெடுமாறன்
சென்னை: இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த கோரி, ஐ.நா. பொது செயலாளருக்கு தமிழர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் இ-மெயில் அனுப்ப வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வரும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில்,
எங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகின்ற 17-ந் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. 19-ந் தேதி கோவையிலும், 24-ந் தேதி மதுரையிலும் பேரணி நடைபெறும். புதுவை, சேலம், வேலூர், திருச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் பேரணி நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும்.
தூதர்களை சந்தி்ப்போம் ..
அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்த உள்ளோம்.
ஐ.நா. பொது செயலாளருக்கு இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழர்கள் அனைவரும் கோடிக்கணக்கில் இ-மெயில் அனுப்ப வேண்டும்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் மரண சாசனம் லட்சக்கணக்கில் அச்சடித்தும், சி.டி.யாக தயாரித்தும் மக்களிடம் வழங்க உள்ளோம் என்றார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
நேற்று ஒரு செய்தியை பத்திரிகைக்கு கொடுத்தேன். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி எந்த குற்றமும் சொல்லவில்லை. அதற்கு 8 பக்கம் மறுபடியும் விளக்கம் கொடுத்து இருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அவர் பூரண குணம் பெற நாம் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் 4-வது விவாத பொருளாக இலங்கை பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு பசுமைத் தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஐயா, உங்கள் ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். அப்படியொரு நிலை வந்தால், எங்கள் 18 எம்.எல்.ஏக்களையும் உங்களிடம் நேரே காட்டி ஓட்டுபோடச் சொல்கிறேன். உங்கள் எடுபிடிகளை வைத்து அறிக்கை வெளியிட வேண்டாம், மனம் இருந்தால் உங்கள் தொண்டர்களையும் இதுபோன்ற கூட்டத்திற்கு அனுப்பி வையுங்கள் என்றார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசுகையில்,
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தபோது கப்பல், கப்பலாக ஆயுதங்கள் இறக்குமதி செய்தது இலங்கை அரசு. ஆனால் இங்கிருந்து என் சகோதரர்களுக்கு 10 லிட்டர் டீசல் போய் விட்டால் கடத்தல் என்கிறார்கள். இனிவரும் இளைஞர்கள் எங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.
ஆயுதம் ஏந்துவேன் ...
இனிவரும் இந்நாட்டு இளைஞர்கள் கடல்வழியாக ஆயுதங்களோடு புறப்படுவார்கள். அப்படி ஆயுதம் ஏந்தும் சூழ்நிலை வந்தால் நான் முதல் ஆளாக நிற்பேன். உன் பாதுகாப்பு சட்டம் கால் தூசிக்கு சமம்.
மாணவர்களே வீதிக்கு வாருங்கள், கிளர்ச்சி பரவட்டும், தமிழகம் கொந்தளிக்கட்டும். இந்திய ஒருமைப்பாடு சிதறிவிடும் என்ற பயம் இந்திய அரசுக்கு வரட்டும். என்னுடைய இந்த நிலைப்பாட்டால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் பிரச்சினை இல்லை என்றார்.
கருணாநிதி கையில் ஆயுதம் ...
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,
முதல்-அமைச்சர் கருணாநிதி, நாங்கள் ஆட்சியை கவிழ்க்க பார்ப்பதாக சொல்கிறார். ஆறரை கோடி தமிழ் மக்கள் உரிமையை மதிக்காத மத்திய அரசை மக்கள் கண்டிக்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகளின் தலைவரான நீங்கள் கண்டிக்க வேண்டும். அதற்கான ஆயுதம் அவரிடம் இருக்கிறது. பயன்படுத்த மறுக்கிறார் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவறிய இந்திய அரசின் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். குற்றவாளி கூண்டில் இந்திய அரசை நிறுத்த வேண்டிய தேவை இப்போது உள்ளது. இந்திய அரசு செய்த குற்றத்தை அடுக்கி கொண்டே போகலாம்.
இலங்கை அரசின் இறையாண்மைக்குள் தலையிட்டது முதல் குற்றம்.
அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுத்தால் தான் இந்திய அரசு போரை நிறுத்த சொல்லும். இலங்கையில் நடைபெறும் போரில் பிரபாகரன் களத்தில் மோதி சாவாரே தவிர, மண்டியிட்டு சாகமாட்டார். உலக வரலாற்றில் பிரபாகரனுக்கு இணையாக புரட்சி தலைவர்கள் தோன்றவில்லை என்றார்.
சீமான் பங்கேற்றார் ...
கூட்டத்தில், பா.ஜ.க. பொது செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக எம்.பி. ஏ.கே.மூர்த்தி, இயக்குனர் சீமான், நடிகர் மன்சூர் அலிகான், வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications