காதல் திருமணம்-மணமகன், 7 பேர் தலை வெட்டி கொலை
Subscribe to Oneindia Tamil

பிகார் மாநிலம் பாகல்பூர் என்ற இடத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
ரத்தன் மண்டல் (21) என்ற வாலிபரும் காஞ்சன் குமாரி (18) காதலித்து வந்தனர். ஆனால், மண்டல் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் குமாரியின் குடும்பத்தால் இதை ஏற்கவில்லை. இதையடுத்து இருவரும் கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து தெரியவந்ததும் குமாரியின் குடும்பத்தினர் மண்டலின் குடும்பத்தினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதை நம்பிச் சென்ற மண்டலையும் அவரது குடும்பத்தினரையும் அந்தக் கும்பல் முதலில் சுட்டுக் கொன்றது. பின்னர் அவர்களது தலையை வெட்டியது. இதையடுத்து உடல்களையும் தலைகளையும் கங்கை ஆற்றில் வீசியுள்ளது.
இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தார் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications