For Daily Alerts
Just In
தி்ருப்பூர்: குழந்தையை ரயிலில் வீசி கொன்ற தாய்!
தி்ருப்பூர்: திருப்பூர் அருகே கடன் தொல்லையால், பெற்ற குழந்தையை ரயிலில் வீசி கொன்றதோடு, தானும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் பெண் ஒருவர்.
அவினாசியைச் சேர்ந்த தம்பதி விக்னேஷ் குமார்-பிரேமலா (27). இவர்களது மகன் தர்ஷன் பிரதீப் (5). கடன் பிரச்சனை உள்ட சில கருத்து மோதல்கள் காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந் நிலையில் பிரேமலதா, ஊத்துக்குளி சாலையில் உள்ள இரண்டாவது ரயில்வே கேட் பகுதிக்கு சென்றார். ஈரோட்டில் இருந்து கோவையை நோக்கி சென்ற ரயில் மீது தனது 5 வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி தூக்கி எரிந்து கொலை செய்தார். பின்னர் தானும் அதே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
Comments
Story first published: Thursday, February 12, 2009, 15:07 [IST]