வைகோவை சந்தித்தார் ராஜ்நாத் சிங் - இலங்கை தொடர்பாக ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
வைகோ டெல்லி சென்றுள்ளார். அவரை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். வைகோவின் வீட்டுக்குச் சென்று ராஜ்நாத் சிங் அவருடன் பேசினார்.
இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகத்தான் ராஜ்நாத் சிங், வைகோவுடன் பேசினார். வேறு அரசியல் முக்கியத்துவம் இதில் இல்லை என்றார்.
வைகோவுக்கு, பாஜகவின் ஆதரவை ராஜ்நாத் சிங் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாஜக முழு ஆதரவு தெரிவித்து வருகிறது. அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனவும், அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் இலங்கையின் செயலைக் கண்டிப்பதாகவும் பாஜக ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications