For Daily Alerts
Just In
இலங்கை: ராணுவ தாக்குதலில் நிருபர் பலி!
வன்னி: ராணுவ தாக்குதலில் மேலும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். அவர் பெயர் சத்தியமூர்த்தி.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வன்னிப் பகுதியிலிருந்து ஈழப் போர் நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு மற்றும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்திதான்.
வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ்ப்பாணம் மண்டைத் தீவைச் சேர்ந்தவர்.
Comments
Story first published: Friday, February 13, 2009, 14:47 [IST]