ஐசியுவிலிருந்து சிறப்பு வார்டில் கருணாநிதி

கடும் முதுகவலியால் அவதிப்பட்டு வந்த முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் 26ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முதுகுத்தண்டில் அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் தீர்மானித்தனர். அதன்படி டெல்லி எய்ம்ஸ் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் தலைமையிலான டாக்டர்கள் குழு கடந்த புதன்கிழமை அறுவைச் சிகிச்சை செய்தது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது.
தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் டிவியில் செய்திகளைப் பார்ப்பதாகவும், பத்திரிகைககளைப் படிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படட்டுள்ளதால் இன்று காலை அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
முதல்வரின் உடல் நிலை குறித்து அடுத்த வாரம் ஆய்வு செய்யப்படவுள்ளது. அதன் பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்கள் முடிவெடுப்பார்கள்.
17ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:
இந் நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என அரசு தலைமைக் கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் தான் சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications