திருச்சி ராணுவ அலுவலகம் முற்றுகை-மாணவர்கள் கைது
திருச்சி: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை ராணுவத்தை கண்டித்து திருச்சியில் உள்ள இந்திய ராணுவ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அரசுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆயுத உதவியை உடனே நிறுத்தக் கோரியும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி ராணுவ அலுவலகத்தை நோக்கிச் மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பானது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ராணுவ அலுவகத்தை முற்றுகையிட முயன்ற 50 மாணவர்களை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications