ரன்வேயில் உரசிய விமானம்-4 பேர் காயம்
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம், லண்டன் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியபோது லேண்டிங் கியர் பழுதானதால் தரையில் உரசியபடி சென்று நின்றது. இதில் 4 பயணிகள் காயமடைந்தனர்.
அந்த விமானத்தில் 67 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 71 பேர் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இதில் இல்லை.
நேற்று மாலை ஆம்ஸ்டர்டாமிலிருந்து அந்த விமானம் லண்டனுக்கு வந்தது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது திடீரென லேண்டிங் கியர் பழுதடைந்தது. இதையடுத்து விமானம் ரன்வேயில் உரசியபடி இறங்கியது.
உடனடியாக விமானத்தை நோக்கி ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. அதிர்ஷ்டவசமாக நான்கு பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்ற 3 பேருக்கும் முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டது.
விமானத்திற்குள் இருந்த பயணிகள் அவசர கால படிக்கட்டு வழியாக கீழே கொண்டு வரப்பட்டனர்.