லோக்சபா தேர்தல் - நாளை திமுக ஆலோசனை
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் குறித்து திமுகவின் ஆலோசனை கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து, நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருக்கிறது.
இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில் திமுகவின் ஆலோசனை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருக்கிறது.
கட்சியின் செய்திகுறிப்பு ஒன்று கூறுகையில், நாளை மாலை கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பணி செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் அணுகுமுறை திமுகவின் அணுகுமுறை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை மறுநாள் மாலை நடக்கும் என்கிறது செய்திகுறிப்பு.