சீமான் வருகை-காங். வக்கீல்கள் போராட்டம்
நெல்லை: நாளை இயக்குனர் சீமான் நெல்லை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காங்கிரஸ் வக்கீல்கள் கமிஷனர் ஆபிசை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நாளை பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடக்கவிருக்கும் பொது கூட்டத்தில் சினிமா இயக்குனர் சீமான் கலந்து கொண்டு, இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசவிருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை காங்கிரஸ் வக்கீல்கள் போலீஸ் கமிஷ்னர் ஆபிசை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரராஜ பெருமாள், மாநகர பொது செயலாளர் சுத்தமல்லி முருகேசன், கவுன்சிலர் உமாபதி சிவன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் அலுவலக சாலையில் முற்றுகையிட்டனர்.
பின்னர் காங்கிரஸ் வக்கீல்கள் சங்க தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் கட்சியினர் நெல்லை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதாவிடம் மனு அளித்தனர். அதில், நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்து கொள்ள கூடாது என்றனர்.












Click it and Unblock the Notifications