கேரளாவில் பொங்கல் விடுமுறை இல்லை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டஙகளில் பொங்கலுக்கு விடுமுறை அளிக்க முடியாது என கேரள அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது.

கேரளாவின் ஓனம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வசிக்கும் கோவை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதேபோல் கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் தமிழர் திருநாளான பொங்கலுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த தேர்தலின் போது முன்னாள் முதல்வர் உம்மன்சான்டி, முதல்வர் அச்சுதானந்தன் உள்ளிட்டோர் பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அங்குள்ள தமிழர்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் பதவிக்கு வந்த பின் அதை மறந்துவிட்டனர். இதையடுத்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின் போது தமிழ் அமைப்பை சேர்ந்த சிலர் விடுமுறையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் அச்சுதானந்தனிடம் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு விடுமுறை அளிக்க முடியாது என கேரள அரசு நேற்று பிடிவாதமாக மறுத்துவி்ட்டது. இதற்கான கேரள அரசின் உத்தரவு தமிழ் அமைப்பினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+