பட்ஜெட்-சத்யம் நிறுவன கணக்கு மாதிரி.. பாஜக
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டில் உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிதிப் பற்றாக்குறை குறையும் என போலியான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது சத்யம் நிறுவனத்தின் மோசடி கணக்கு போல் இருக்கிறது என பாஜக செய்தி தொடர்பாளர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாக நேற்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இது குறித்த் பாஜக செய்தி தொடர்பாளர் அருண் ஜெட்லி கூறுகையில்,
உலக பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதை மத்திய அரசு எப்படி சமாளிக்கும் என்பது குறித்தும் எதுவும் சொல்லப்படவில்லை.
மிக பெரிய சிக்கலில் உலகமே தவிக்கும் நிலையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் மத்திய அரசோ நிதி பற்றாக்குறை 6 சதவீதம் வரை குறையும் என போலி கணக்கை காட்டுகிறது. இந்த பட்ஜெட் சத்யம் நிறுவனத்தின் மோசடி வரவு-செலவு கணக்கை போல இருக்கிறது என்றார் ஜெட்லி.












Click it and Unblock the Notifications