தப்பி வரும் தமிழர்கள் மீது மீண்டும் குண்டு வீச்சு -50 தமிழர்கள் பலி
வன்னி: இன்று அதிகாலை 108 தமிழர்களை கொடூரமாகக் கொன்ற இலங்கை படையினர் இன்று பிற்பகல் நடத்திய இனனொரு வெறித்தனமான தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இரணைப்பாளை பகுதியில் உள்ள அனந்தாபுரம் என்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு விரைந்து சென்ற தமிழர்களைக் குறி வைத்து நான்கு விமானப்படை விமானங்கள் கிளஸ்டர் எனப்படும் கொத்து வெடிகுண்டுகளை வீசி இன்று பிற்பகல் 12.50 மணிக்குத் தாக்கியுள்ளன.
இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்த 70 பேர் மாத்தளன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பத்து பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விடாமல் ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகிறது.
தாக்குதல் நடந்த பகுதி முழுவதும் காயமடைந்து கிடக்கின்றனர் பல தமிழர்கள். அவர்களை உடனடியாக திரிகோணமலை அல்லது பிற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லாவிட்டால் பெரும் உயிரிழப்பு தவிர்க்க முடியாதுத என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தற்போது வன்னிப் பகுதியில் எந்தவிதமான மருந்துகளும் இல்லை. காரணம், இலங்கை அரசு மருந்து சப்ளையை இப்பகுதியில் நிறுத்தி 2 மாதங்களாகிறது. இதனால் காயமுற்ற பலரும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த பத்து மணி நேரத்தில் முல்லைத்தீவில் மட்டும் 160 பேர் உயிரிழந்துள்ளதாக மாத்தளன் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications