தப்பி வரும் தமிழர்கள் மீது மீண்டும் குண்டு வீச்சு -50 தமிழர்கள் பலி
வன்னி: இன்று அதிகாலை 108 தமிழர்களை கொடூரமாகக் கொன்ற இலங்கை படையினர் இன்று பிற்பகல் நடத்திய இனனொரு வெறித்தனமான தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இரணைப்பாளை பகுதியில் உள்ள அனந்தாபுரம் என்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு விரைந்து சென்ற தமிழர்களைக் குறி வைத்து நான்கு விமானப்படை விமானங்கள் கிளஸ்டர் எனப்படும் கொத்து வெடிகுண்டுகளை வீசி இன்று பிற்பகல் 12.50 மணிக்குத் தாக்கியுள்ளன.
இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்த 70 பேர் மாத்தளன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பத்து பேர் வழியிலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விடாமல் ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகிறது.
தாக்குதல் நடந்த பகுதி முழுவதும் காயமடைந்து கிடக்கின்றனர் பல தமிழர்கள். அவர்களை உடனடியாக திரிகோணமலை அல்லது பிற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லாவிட்டால் பெரும் உயிரிழப்பு தவிர்க்க முடியாதுத என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தற்போது வன்னிப் பகுதியில் எந்தவிதமான மருந்துகளும் இல்லை. காரணம், இலங்கை அரசு மருந்து சப்ளையை இப்பகுதியில் நிறுத்தி 2 மாதங்களாகிறது. இதனால் காயமுற்ற பலரும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த பத்து மணி நேரத்தில் முல்லைத்தீவில் மட்டும் 160 பேர் உயிரிழந்துள்ளதாக மாத்தளன் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications